Kathir News
Begin typing your search above and press return to search.

ராஜபாளையத்தில் முருகன் கோயில் கூரைக்கு தீ வைப்பு!

ராஜபாளையத்தில் அமைந்துள்ள முருகன் கோயில் முன்புற உள்ள கூரைக்கு தீ வைத்துள்ள சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபாளையத்தில் முருகன் கோயில் கூரைக்கு தீ வைப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  9 Feb 2022 12:24 PM GMT

ராஜபாளையத்தில் அமைந்துள்ள முருகன் கோயில் முன்புற உள்ள கூரைக்கு தீ வைத்துள்ள சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் லட்சுமியாபுரத்தை சேர்ந்தவர் கணேசன் 48, இவர் அப்பகுதியில் பழனி பாதயாத்திரை குழுவை நடத்தி வருகிறார். அது மட்டுமின்றி கோயில் ஒன்றையும் கட்டி வழிப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இரவு நேரத்தில் அங்கு சென்ற போதை ஆசாமிகள் மது அருந்தியுள்ளனர். அதனை தட்டிக்கேட்ட கணேசனை அந்த கும்பல் தாக்கியுள்ளது. இதன் பின்னர் கோயிலுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த கூரைக்கு தீ வைத்து எரித்துள்ளனர். இந்த சம்பவத்தால் கோயிலில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News