Kathir News
Begin typing your search above and press return to search.

ஆக்கிரமிக்கப்பட்ட ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் நிலம் மீட்பு!

ஆக்கிரமிக்கப்பட்ட ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் நிலம் மீட்பு!

ThangaveluBy : Thangavelu

  |  15 Feb 2022 6:39 AM GMT

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் இருக்கிறது. இவை அனைத்தும் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால் அதனை தனிநபர்கள் ஆக்கிரமித்து முறையாக வரி கட்டாமல் அதனை உபயோகித்து வருகின்றனர்.

அதே போன்று ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமாக திருச்சி, சென்னை நெடுஞ்சாலையில் 58 சென்ட் நிலம் உள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த சிலர் இரவோடு, இரவாக ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட முயற்சி செய்துள்ளனர். இது குறித்து புகார் எழுந்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஜேசிபி மூலமாக அகற்றி நிலத்தை மீட்டனர்.

Source: Polimer

Image Courtesy: Daily Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News