மதமாற்ற கொடுமையே என் பேத்தியை தற்கொலைக்கு தூண்டியது - தஞ்சை மாணவியின் பாட்டி
By : Dhivakar
"நான் கட்டாய மதமாற்றத்திற்கு வற்புறுத்தப்பட்டதால் தான் நான் தற்கொலை செய்து கொண்டேன்" என்று தஞ்சை மாணவி இறக்கும் தருணத்தில் தன் தாய் மாமாவிடம் தெரியப்படுத்தியுள்ளார், என்று லாவண்யாவின் அம்மா வழி பாட்டி மங்கையர்கரசி கூறியுள்ளார்.
கிறிஸ்துவ பள்ளியின் கட்டாய மத மாற்றத்தால் தற்கொலை செய்துகொண்ட தஞ்சை மாணவி துயரச் சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பலரும் தங்களது கண்டனக் குரல்களை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இவ்வழக்கு குறித்து சி.பி.ஐ விசாரணையும் தொடங்கிவிட்டது. இவ் விசாரணையின் மூலம் பல உண்மைகள் வெளிவரும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
சி.பி.ஐ விசாரணையின் முடிவுக்கு முன்பே, தமிழக ஊடகங்கள் லாவண்யாவின் தற்கொலை விவகாரத்தில், கட்டாய மதமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை போன்ற ஒரு கருத்தாக்கங்களை உருவாக்கி வைத்திருந்தனர். அதாவது அந்த மாணவி தன் சித்தியின் தொந்தரவால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்பது போன்ற ஒரு பொய்யை பரப்பி வந்தனர்.
இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனமான 'சாணக்கியா' இறந்த தஞ்சை மாணவியின் தாய் வழி பாட்டி மங்கையர்க்கரசியிடம் நேர்காணல் கண்டது. அந்த நேர்காணலில் மங்கையர்கரசி, இறந்த மாணவி மற்றும் அவரது தாய் கனிமொழி குறித்து பல உருக்கமான தகவல்களை வெளியிட்டார். இறுதியில் மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது: மங்கையர்க்கரசியும், லாவண்யாவின் தாய் மாமாவும் மாணவியை சென்று பார்த்துள்ளனர். அப்போது மாணவி தன் தாய் மாமாவிடம் "என்னை பள்ளி நிர்வாகம் மதமாற்றத்திற்கு வற்புறுத்தியதால் தான் நான் தற்கொலை செய்து கொண்டேன்" என்று பகிரங்கமாக கூறியுள்ளார் என்று அந் நேர்காணலில் மாணவியின் தாய் வழி பாட்டியான மங்கையர்க்கரசி பகிரங்கமாக கூறியுள்ளார்.
மேலும் சி.பி.ஐ விசாரணை முடிவுகள், இதுபோன்று பல உண்மைகளைத் திரட்டி மக்கள் முன் கொண்டு வரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.