திருநெல்வேலி : தி.மு.க'வினரால் தாக்கப்பட்ட பா.ஜ.க பெண் வேட்பாளர், மருத்துவமனையில் அனுமதி !
By : Dhivakar
திருநெல்வேலி: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் போது, தி.மு.க'வினரால் பா.ஜ.க பெண் வேட்பாளர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகமெங்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்து முடிந்தது. ஆளும் கட்சியான தி.மு.க தன் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பல இடங்களை கைப்பற்றியுள்ளது.
தி.மு.க வென்ற பல இடங்களில், எதிர்க்கட்சியான அ.தி.மு.க'வின் வெற்றியை பா.ஜ.க தடுத்து, இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
மேலும் "பா.ஜ.க தமிழகத்தில் காலூன்ற முடியாது" என்று கூறியவர்களுக்கு மத்தியில், எந்த ஒரு கூட்டணியும் இல்லாமல், தனித்து போட்டியிட்டு பா.ஜ.க இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகப்படியான இடங்களை பிடித்து அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் பல தி.மு.க'வினர் பா.ஜ.க'வின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ளாமல், அராஜகப் போக்கை கையாளத் தொடங்கிவிட்டனர்.
இதன் வரிசையில், திருநெல்வேலியில் நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, இருபத்தி ஆறாவது வார்டு பா.ஜ.க பெண் வேட்பாளரான மாரியம்மாள், தி.மு.க'வினரால் தாக்கப்பட்டார். பின்னர் அவர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பா.ஜ.க வேட்பாளரை இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
தமிழகத்தில் பா.ஜ.க:வின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ளாமல், தி.மு.க:வினர் வன்முறையை கையாளத் தொடங்கிவிட்டனர் என்பதற்கு இதுவே ஒரு அறிகுறி ஆகும்.