Kathir News
Begin typing your search above and press return to search.

கோவை: ஒவ்வொரு வீடுகளிலும் வரையப்பட்ட மர்ம குறியீட்டால் மக்கள் பீதி!

கோவை: ஒவ்வொரு வீடுகளிலும் வரையப்பட்ட மர்ம குறியீட்டால் மக்கள் பீதி!

ThangaveluBy : Thangavelu

  |  24 Feb 2022 6:01 AM GMT

கோவை, குறிச்சி ஹவுசிங் பகுதியில் உள்ள வீடுகளில் மர்ம குறியீடு போடப்பட்டிருப்பதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் சமீபத்தில் உள்ளாட்சி நகர்ப்புற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனால் மக்கள் அடுத்த வேலையை பார்க்க தொடங்கிய நிலையில் தற்போது திடீரென்று வீடுகளில் மர்ம குறியீடுகள் போடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதாவது குறிச்சி ஹவுசிங் யூனிட், காமராஜர் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து செல்கின்ற வழித்தடங்களில் பள்ளி, மற்றும் வடமாநில மக்கள் வசிக்கின்ற குடியிருப்பு உள்ளிட்டவை உள்ளது. அங்குள்ள மைதானங்களில் சிறுவர்கள் விளையாடுவது வழக்கம்.

மேலும், அப்பகுதியில் கஞ்சா, மது போதை ஆசாமிகளும் அடிக்கடி சுற்றித்திரிவது வழக்கம் என கூறப்படுகிறது. அங்குள்ள வீடுகளில் தற்போது மர்ம குறியீடுகள் வரையப்பட்டுள்ளது. இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏதேனும் தீவிரவாத செயல்களுக்காக போடப்பட்டதா அல்லது கொள்ளைக்கூட்டத்துக்கு தகவல் தெரிவிக்கும் குறியீடா என்கின்ற கோணங்களிலும் தகவல் பேசப்படுகிறது.

அந்த குறியீட்டில் ஆங்கில எழுத்து ஆர் உடன் கூடிய வெள்ளை நிற சாக்பீஸால் வரையப்பட்டுள்ளது. அதனை சுற்று கறுப்பு நிறத்தில் கோடு போடப்பட்டுள்ளது. ஒரு வேலை தேர்தல் சமயங்களில் தங்களுக்காக வாக்களிப்பவர்கள் என்ற விவரத்திற்காக வரையப்பட்ட குறீயீடா அல்லது வேறு ஏதேனும் சமூக விரோதிகள் வரையப்பட்டதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News