Kathir News
Begin typing your search above and press return to search.

மசூதி, சர்ச்சு மீது காண்பிக்கும் அக்கரை கோவில்கள் மீது இல்லையே? தி.மு.க. அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

மசூதி, சர்ச்சு மீது காண்பிக்கும் அக்கரை கோவில்கள் மீது இல்லையே? தி.மு.க. அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

ThangaveluBy : Thangavelu

  |  25 Feb 2022 12:33 PM GMT

கோவில்கள் நிர்வாகத்திலும் ஒரு அடிப்படைப் பிரச்சினை உள்ளது. அவை தொடர்ந்து அரசாங்கத்தின் கட்டை விரல் கீழ் இருக்க வேண்டுமா? என்று மதுரை உயர்நீதிமன்றம் திமுக அரசை சராமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

இந்து முன்ணனி ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மதச்சார்பற்றது என கூறிக்கொள்ளும் அரசு அனைத்து மத நிறுவனங்களையும் சமமாக நடத்த வேண்டாமா? தேவாலயங்கள் மசூதிகள் மீது அரசு காண்பிக்கும் கட்டுப்பாடுகளை கோவில்கள் மீதும் காண்பிக்க வேண்டும் என்று வாதிடுவது நியாயமானது அல்லவா? நீதியரசர் சுவாமிநாதன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் நியாயமான கேள்வி, கோவில் நிர்வாகத்திலும் ஒரு அடிப்படைப் பிரச்சினை உள்ளது. அவை தொடர்ந்து அரசாங்கத்தின் கட்டைவிரல் கீழ் இருக்க வேண்டுமா? மதச்சார்பற்றது என்று கூறிக்கொள்ளும் அரசு அனைத்து மத நிறுவனங்களையும் சமமாக நடத்த வேண்டாமா? அறிவும், அர்ப்பணிப்பும் உள்ள ஆர்வலர்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் மீது அரசு காண்பிக்கும் அதே அளவு கட்டுப்பாடுகளை கோவில்கள் மீதும் காண்பிக்க வேண்டும் என்று வாதிடுவது நியாயமானது அல்லவா? நீதியரசர் சுவாமிநாதன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News