Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கக்கூடாது!

விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கக்கூடாது!

ThangaveluBy : Thangavelu

  |  27 Feb 2022 12:53 PM GMT

விவசாய நிலங்களில் டாஸ்மாக் மதுபானக்கடைகளை திறக்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் யாழினி பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை திறப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் முனீஷ்வர்நாத் பண்டாரி, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.

அதனை விசாரித்த போது, அரசு சார்பில், வேளாண் நிலயம் என்பதால் டாஸ்மாக் கடை திறக்கப் போவதில்லை என்று அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். மேலும், விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source, Image Courtesy: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News