Kathir News
Begin typing your search above and press return to search.

விபத்தில் உயிரிழந்த குரங்கின் உடல் கோயில் வளாகத்தில் அடக்கம்!

விபத்தில் உயிரிழந்த குரங்கின் உடல் கோயில் வளாகத்தில் அடக்கம்!

ThangaveluBy : Thangavelu

  |  3 March 2022 9:02 AM GMT

நெல்லிக்குப்பத்தில் உயிரிழந்த குரங்கின் உடலை கோயில் வளாகத்தில் அடக்கம் செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி சாலையோரம் சங்கரி மகாகாளி கோயில் உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்னர் கோயிலுக்கு ஒரு குரங்கு வந்துள்ளது. அப்போது கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களும் கொடுக்கின்ற உணவை சாப்பிட்டு அங்கேயே குரங்கு காலத்தை கழித்து வந்தது. இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்னர் குரங்கு சாலை விபத்தில் காயமடைந்துள்ளது.

அங்குள்ள பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் குரங்கை மீட்டு கால்நடை மருத்துவரிடம் சிகிச்சைக்கு எடுத்து சென்றனர். மருத்துவர் சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக நேற்று (மார்ச் 2) குரங்கு உயிரிழந்தது. குரங்கு உயிரிழந்த செய்தியை ஆட்டோ மூலம் மைக் வைத்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கோயில் வளாகத்திலேயே குரங்கு அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வின் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Dinamalar

Image Courtesy: யாழ் இணையம்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News