Kathir News
Begin typing your search above and press return to search.

திருவிழா நடத்துவதற்கு அதிகாரிகள் மறுப்பு! சமாதான கூட்டம் புறக்கணிப்பு, ஆயிரம் போலீஸ் குவிப்பால் பதற்றம்!

தேவிகாபுரம் பெரியநாயகி உடனுறை கனககிரீஸ்வரர் கோயிலில் தேர்திருவிழா நடத்துவதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் வழக்கமான முறையை பின்பற்றாமல் புதிய நடைமுறைகளை பின்பற்ற சொல்வதால், கிராம மக்கள் சமாதான கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்தனர்.

திருவிழா நடத்துவதற்கு அதிகாரிகள் மறுப்பு! சமாதான கூட்டம் புறக்கணிப்பு, ஆயிரம் போலீஸ் குவிப்பால் பதற்றம்!

ThangaveluBy : Thangavelu

  |  12 March 2022 8:30 AM GMT

தேவிகாபுரம் பெரியநாயகி உடனுறை கனககிரீஸ்வரர் கோயிலில் தேர்திருவிழா நடத்துவதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் வழக்கமான முறையை பின்பற்றாமல் புதிய நடைமுறைகளை பின்பற்ற சொல்வதால், கிராம மக்கள் சமாதான கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருப்பதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரத்தில் பெரியநாயகி அம்மன் உடனுறை கனககிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை விஜயநகர அரசர் காலக்கட்டத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். தினமும் ஒவ்வொரு உபயதாரர்களை வைத்து நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த ஆண்டு திருவிழா சமயத்தில் சுவாமியை தூக்குவதற்காக வழக்கத்திற்கு மாறாக மற்றொரு பிரிவை சேர்ந்தவர் பங்கேற்றார். இதனால் வழக்கமாக சாமியை தூக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வழக்கத்திற்கு மாறாக செயல்படும் அதிகாரிகயை கண்டித்தனர். இதற்கிடையில் மற்றொரு பிரிவை சேர்ந்த ஒருவர் விழா சமயங்களில் தனக்கும் ஒருநாள் உபயதாரர்களாக சேர்க்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்றும் நிலுவையில் இருக்கிறது.

இதனிடையே தற்போது பங்குனி உத்திர திருவிழாவிற்கு கொடியேற்றம் இன்று (மார்ச் 12) துவங்கப்பட வேண்டும். ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. மாறாக மற்றொரு பிரிவை சார்ந்தவருக்கு ஒதுக்குவதற்கு முடிவு செய்து வழக்கமாக திருவிழா நடத்தும் மக்களிடம் மிரட்டும் வகையில் பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் கடந்த 10ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி பலரை போராட்டத்தில் தூண்டுவதற்காக அமைந்தது. இதனால் கோயில் அமைந்த கிராமம் முழுவதும் பல ஆயிரம் மக்கள் திரண்டுள்ளனர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சமாதான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதில், டி.எஸ்.பி., தாசில்தார், மற்றும் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை கிராம மக்கள் புறக்கணித்துவிட்டனர். உடனடியாக எங்களது கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்று கிராம மக்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

Source: Dinamalar

Image Courtesy:Wiki

Next Story
கதிர் தொகுப்பு
Trending News