Begin typing your search above and press return to search.
ஆற்காடு கங்காதர ஈஸ்வரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம்!
By : Thangavelu
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் மிகவும் பிரபலமான கங்காதார ஈஸ்வரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ தேரோட்டம் மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆற்காட்டில் நூறாண்டுகளுக்கும் மேலான மிகவும் பழமை வாய்ந்தவையாக கருதப்படும் கங்காதர ஈஸ்வர் கோயில் ஆகும். இக் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மூலவருக்கும், அன்னபூரணி அம்மனுக்கும் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
அதன் பின்னர் ஏராளமான வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமியின் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதனையடுத்து முக்கிய வீதிகளில் தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்து சென்றனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Source, Image Courtesy: Polimer
Next Story