Kathir News
Begin typing your search above and press return to search.

மதுரை மேலூரில் மீன்பிடி திருவிழா: ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் பங்கேற்பு!

மதுரை மேலூரில் மீன்பிடி திருவிழா: ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் பங்கேற்பு!

ThangaveluBy : Thangavelu

  |  17 March 2022 8:16 AM GMT

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள அய்யமுத்தப்பட்டியில் உள்ள கரை முனியாண்டி சுவாமி கோயிலுக்கு சொந்தமான பூலான்குடி கண்மாய் உள்ளது. அங்கு விவசாய மக்களின் வாழ்வும், வளமும் செழிக்க வேண்டி அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் இருக்க மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்மாயில் இறங்கி ஆர்வமுடன் மீன்களை பிடித்தனர். அது போன்று பிடித்த மீன்களை வீட்டுக்கு எடுத்துச்சென்று அண்டை வீட்டார்களுக்கும் பகிர்ந்தளித்து உணவு சமைத்து சாமிக்கு படையலிட்டு பின்னர் சாப்பிட்டு மகிழ்கின்றனர். இது போன்ற திருவிழாவை காண்பதற்காக சுற்று வட்டார மக்கள் பெருமளவில் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News