Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக இளைஞர்கள் ஆர்.எஸ்.எஸ்.சில் சேருவதற்கு ஆர்வம்: தலைவர் குமாரசாமி தகவல்!

தமிழக இளைஞர்கள் ஆர்.எஸ்.எஸ்.சில் சேருவதற்கு ஆர்வம்: தலைவர் குமாரசாமி தகவல்!

ThangaveluBy : Thangavelu

  |  18 March 2022 11:55 AM GMT

ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் சேருவதற்கு தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் அதிகம் பேருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்புடைய தமிழக தலைவர் குமாரசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக குமாரசாமி அளித்துள்ள பேட்டியில்; ஆர்.எஸ்.எஸ்.சின் தேசி பொதுக்குழுவானது மார்ச் 11, 12, 13 ஆகிய நாட்களில் குஜராத்தில் நடைபெற்றது. இந்த அமைப்பின் நூற்றாண்டு விழா 2025ம் ஆண்டு வருவதை தொடர்ந்து அமைப்பின் பணிகளை அனைத்து பணிகளுக்கும் எடுத்துச் செல்வதற்காக பொதுக்குழுவில் பேசப்பட்டது.

தற்போதைய சூழலில் நாடு முழுவதும் 34 ஆயிரத்து 559 ஊர்களில் பணிகள் நடைபெறுகிறது. மேலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேருவதற்காக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் தமிழகத்தில் அதிகம் பேர் ஆர்வம் காட்டி வருகின்றனர் அதிலும் இளைஞர்களே ஷாகா பயிற்சி முகாமிற்கு அதிகம் பேர் வருகின்றனர் எனத் தெரிவித்தார்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News