Kathir News
Begin typing your search above and press return to search.

நாமக்கல்: ஆஞ்சநேயர் கோயில் உட்பட பல்வேறு கோயில் விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கிய இந்து முன்னணி!

நாமக்கல்: ஆஞ்சநேயர் கோயில் உட்பட பல்வேறு கோயில் விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கிய இந்து முன்னணி!

ThangaveluBy : Thangavelu

  |  19 March 2022 10:29 AM GMT

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் பங்கேற்ற ஆயிரணக்கணக்கான பக்தர்களுக்கு வெயிலுக்கு இதமாக நீர்மோர் மற்றும் நாட்டு சர்க்கரை பானகத்தை இந்து முன்னணி சார்பில் வழங்கப்பட்டது.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு நரசிம்மர் சுவாமி, ரங்கநாதர் சுவாமி மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி ஆலயங்களில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்றவர்களுக்கு நாட்டு சர்க்கரையால் செய்யப்பட்ட பானகம் மற்றும் நீர்மோர் உள்ளிட்டவைகளை இந்து முன்னணி நிர்வாகிகளின் ஏற்பாட்டால் வழங்கப்பட்டது. இதனை பக்தர்கள் உற்சாகமாக அருந்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News