காளியம்மன் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: இந்து முன்னணி நிர்வாகிகளுடன் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
By : Dhivakar
தூத்துக்குடி: காளியம்மன் கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை.
தமிழகத்தில் கடந்த ஒன்பது மாதங்களாக கோயில் நிலங்களை ஆக்கிரமிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. உள்ளூர்வாசிகள் சிலர் தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, கோயில் நிலங்களை ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாடி வருகின்றனர் என்று செய்திகள் வெளி வருகின்றன. "இதைத் தடுத்து அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பல இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
தூத்துக்குடி மாநகர் பகுதியில், குறுக்குச் சாலையில் எழுந்தருளியிருக்கும் வீரகாளியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோயிலில் நாள்தோறும் பல பக்தர்களும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வழிபாடு நடத்துவது வழக்கம்.
இக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரிடமிருந்து கோயில் நிலத்தை மீட்கக் கோரி, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி பி ஜெயக்குமார் தலைமையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.