Kathir News
Begin typing your search above and press return to search.

மசூதியில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தினால் மதமாற்ற வாய்ப்பு: ஆட்சியரிடம் இந்து முன்னணி பரபரப்பு புகார்!

மசூதியில் மாணவர்களுக்கு வகுப்பு நடத்தினால் மதமாற்ற வாய்ப்பு: ஆட்சியரிடம் இந்து முன்னணி பரபரப்பு புகார்!

ThangaveluBy : Thangavelu

  |  24 March 2022 12:07 PM GMT

மசூதியில் பள்ளிக்கூட வகுப்புகள் நடைபெற்றால் மதமாற்றம் நிகழ்வதற்கு வாய்ப்பு இருப்பதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று இந்து முன்னணி புகார் அளித்துள்ளது.

இந்து முன்னணி மாநில செயலாளர் மனோகர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் படிப்பதற்கு இடம் இல்லாத நிலை உருவாகியது. இதனால் தச்சூரில் உள்ள மசூதியில் மாணவர்களை படிக்க அனுமதித்துள்ளனர்.

இதனால் மதமாற்றம் நிகழ வாய்ப்பு இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக வகுப்பறைகளை கட்டித்தரவும், மதமாற்றம் நிகழாமல் இருக்க உடனடியாக மாணவர்களை இடமாற்றம் செய்யவும் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News