Kathir News
Begin typing your search above and press return to search.

அந்தியூர் சாலையில் நடந்து சென்ற இந்து முன்னணி நிர்வாகியை கொலை செய்த பாரூக்: களத்தில் இறங்கி போராடியதால் குற்றவாளிகள் கைது!

அந்தியூர் சாலையில் நடந்து சென்ற இந்து முன்னணி நிர்வாகியை கொலை செய்த பாரூக்: களத்தில் இறங்கி போராடியதால் குற்றவாளிகள் கைது!

ThangaveluBy : Thangavelu

  |  24 March 2022 12:08 PM GMT

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் சதீஷ் 32 என்ற இந்து முன்னணி நிர்வாகி அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் பாரூக் உட்பட அவரது நண்பர்களை போலீசார் கைது செய்துள்ளது. சதீஷ் என்பவர் இந்து முன்னணி பொறுப்பாளராக இருக்கின்றார். இவர் சாலையில் நடந்து சென்றபோது பாரூக் என்பவர் இவரிடம் தகராறு செய்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் மறுநாள் சதீஷ் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அவர்களின் உறவினர்களிடம் மட்டுமின்றி இந்து முன்னணி நிர்வாகிகளிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் பின்னர் பாரூக் உள்ளிட்டோரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். பின்னர் இஸ்லாமியர்கள் கூட்டமாக சென்று பாரூக்கை மீட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இந்து முன்னணி நிர்வாகிகள் அதிரடியாக களத்தில் இறங்கினர். கொலைக்கு காரணமான பாரூக்கை உடனடியாக கைது செய்யவில்லை என்றால் போராட்டம் வெடிக்கும் என்ற எச்சரிக்கை செய்தனர்.

இதன் பின்னர் பாரூக் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்தது தொடர்பாக பிரேத பரிசோதனை முடிவிற்குப் பிறகு நடவடிக்க எடுப்பதாக போலீசார் தரப்பில் இந்து முன்னணி நிர்வாகிகளிடம் உறுதி அளித்துள்ளனர். சாலையில் சென்ற இந்து முன்னணி நிர்வாகியை இஸ்லாமிய நபர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News