Kathir News
Begin typing your search above and press return to search.

'ஸாரி மணி.. என்ன செய்றது தெரியலை!" மணல் கொள்ளையருடன் போலீஸ் பேசும் ஆடியோவால் பரபரப்பு!

ஸாரி மணி.. என்ன செய்றது தெரியலை! மணல் கொள்ளையருடன் போலீஸ் பேசும் ஆடியோவால் பரபரப்பு!

ThangaveluBy : Thangavelu

  |  30 March 2022 12:05 PM GMT

வேலூர் மாவட்டத்தில் மணல் கொள்ளையருடன் போலீசார் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட வாகனத்தை பாகாயம் போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையில் மணல் கடத்தலில் ஈடுபடும் பஞ்சர் மணி என்பவர் போலீசாரிடம் இருந்து தப்பியோடினார். இவர் தப்பியது போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தப்பியோடிய மணல் கொள்ளையர் பஞ்சர் மணியுடன் போலீஸ் ஒருவர் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசும்போது, எங்க இருக்க மணி, உடனே பெட்ரோல் பங்க் கிட்ட வாங்க கொஞ்சம் பேசனும் என்று போலீஸ் சொல்கிறார். அதற்கு பஞ்சர் மணி, எதுக்குனா வரசொல்லறிங்க என்று கேட்கிறார். அதற்கு போலீஸ், இல்ல எஸ்.ஐ.க்கு சண்டை ஆகிருக்கு இதனால் வேண்டும் என்றே மாட்டி விடறாங்க. உடனே வாங்க மணி பேசனும் என்று போலீஸ் பேசுகிறார். இந்த ஆடியோ வெளியானதால் எஸ்.பி. விசாரணை நடத்தி வருகிறார். மணல் கடத்தலில் ஈடுபடும் கொள்ளையருடன் போலீஸ் ஒருவர் ஸாரி சொல்வது போலீஸ் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Thanthi Tv

Image Courtesy: ETV Bharat

Next Story
கதிர் தொகுப்பு
Trending News