Kathir News
Begin typing your search above and press return to search.

திருப்பூரில் இந்து அன்னையர் முன்னணி நடத்தும் காப்பு அணியும் விழா!

திருப்பூரில் இந்து அன்னையர் முன்னணி நடத்தும் காப்பு அணியும் விழா!

ThangaveluBy : Thangavelu

  |  11 April 2022 1:10 PM GMT

திருப்பூர் கிழக்கு மாவட்டத்தில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் காப்பு அணியும் விழா நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூர் கிழக்கு மாவட்டம், குண்டடம் ஒன்றியம் இந்து அன்னையர் முன்னணி சார்பில் தேர்வு பயம் நீங்க காப்பு அணியும் விழா நடைபெறுகிறது. இது பற்றி அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளதாவது: அன்புக்குரிய மாணவச் செல்வங்களே! நல்ல முறையில் தேர்வு எழுத நல்ல உடல்நலம், மனநலம் அமைய நினைவாற்றல் பெருக, வேதங்களும் தலைவனும், ஸ்ரீ சரஸ்வதிக்கு ஞானம் வழங்கியவருமான ஹயக்ரீவருக்கு மந்திரங்கள் கூறி காப்பு அணியும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

எனவே மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் இந்த பூஜையில் கலந்து கொண்டு ஹயக்ரீவர் அருளைப்பெற்று நல்லமுறையில் பயமின்றி தேர்வு எழுதி, அதிக மதிப்பெண் பெற அன்புடன் அழைக்கின்றோம். இடம், அருள்மிகு கொங்கு வடுகநாதர் சுவாமி திருக்கோயில் வளாகம், குண்டடம், நாள், 17.04.2022 ஞாயிறு, காலை 10 மணி. இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.ராஜேஷ் மாநில இணை அமைப்பாளர் இந்து முன்னணி தலைமை ஏற்று நடத்தி வைக்கிறார். டி.கோவிந்தராஜ், குண்டடம் ஒன்றிய தலைவர் முன்னிலை வகிக்கிறார். சித்ரா பழனிக்குமார் வரவேற்புரை வழங்குகிறார். தினேஷ்குமார் வாழ்த்துரை வழங்குகிறார். இவ்வாறு அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News