Kathir News
Begin typing your search above and press return to search.

மந்திரிக்க கட்டாயமாக தர்கா அழைத்து சென்ற தந்தை மீது மகன் வெறிச்செயல்!

மந்திரிக்க கட்டாயமாக தர்கா அழைத்து சென்ற தந்தை மீது மகன் வெறிச்செயல்!

DhivakarBy : Dhivakar

  |  19 April 2022 4:33 AM GMT

ராணிப்பேட்டை : தன்னை மந்திரிப்பதற்காக, தர்காவுக்கு அழைத்துச் சென்ற தந்தையை, வீடு திரும்பிய பின் மகன் வெட்டிக் கொன்றச் சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராணிப்பேட்டை மாவட்டம் வேப்பூரில், 'இக்பால்' என்ற 70 வயது முதியவர் அவரது இரண்டாவது மகன் இம்ரானுடன் வசித்து வந்துள்ளார்.


சமீபத்தில் இம்ரானின் தாயார் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இம்ரானின் மன நிலையை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியது. மனநிலை பாதிக்கப்பட்ட இம்ரானை சரிசெய்ய, தந்தை அவரை அருகிலுள்ள தர்காவிற்கு மந்திரிப்பதற்காக பலமுறை அழைத்துச் சென்றுள்ளார்.


நேற்றும் அதேபோல் தர்காவில் மந்திரித்துவிட்டு வீடு திரும்பிய பின், தந்தை-மகன் இருவருக்குமே வாக்குவாதம் நடைபெற்றது.


"இனி மந்திரிப்பதற்காக தர்காவிற்கு என்னை அழைத்துச் செல்லக் கூடாது!" என்று இம்ரான் தன் தந்தையிடம் தீவிரமாக வாக்குவாதம் செய்துள்ளார்.


ஒரு கட்டத்தில் இம்ரான் கோபத்தின் உச்சிக்கு சென்று, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து இக்பாலின் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் இக்பால் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.


உடனடியாக சம்பவ இடத்திற்கு தகவலறிந்து விரைந்த காவல்துறையினர், இம்ரானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Images and Inputs from பாலிமர்


Next Story
கதிர் தொகுப்பு
Trending News