Kathir News
Begin typing your search above and press return to search.

சொத்துவரி கட்டாததால் வைரமுத்துவின் திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கும் முயற்சி! நடந்தது என்ன?

சொத்துவரி கட்டாததால் வைரமுத்துவின் திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கும் முயற்சி!  நடந்தது என்ன?

DhivakarBy : Dhivakar

  |  22 April 2022 1:41 PM GMT

சென்னை : பிரபல திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துவின் திருமண மண்டபத்திற்கு சொத்துவரி கட்டாததால், அதிகாரிகள் சீல் வைக்க முயன்றனர்.


சென்னை கோடம்பாக்கத்தில், கவிஞர் வைரமுத்துவின் திருமண மண்டபம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த மண்டபத்திற்கு கடந்த 4 ஆண்டுகளாக 8 லட்சம் ரூபாய் சொத்து வரியை, மாநகராட்சிக்கு செலுத்தப்படவில்லை. இதற்கான நோட்டீசும் வழங்கப்பட்டுவிட்டது.


நோட்டீஸ் வழங்கியும், வைரமுத்து தரப்பிலிருந்து சொத்து வரி செலுத்தப்படாமல் இருந்ததால், மாநகராட்சி அதிகாரிகள் மண்டபத்திற்கு சீல் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து வைரமுத்து தரப்பிலிருந்து, சொத்து வரி முழுமையாக செலுத்தப்பட்டதை தொடர்ந்து, அதிகாரிகளின் சீல் வைக்கும் முயற்சிகள் கைவிடப்பட்டன.


நாட்டிற்கும், வீட்டிற்கும் தன் பாடல்கள் மற்றும் கவிதைகள் மூலம் அறிவுரை கூறிய கவிஞர் வைரமுத்து, இப்படி அரசாங்கத்திற்கு நான்கு ஆண்டுகள் வரி செலுத்தாமல், பின்னர் அரசு நடவடிக்கை எடுக்க முனையும்பொழுது வரி செலுத்தும் பண்பை, பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.


Thanthi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News