Kathir News
Begin typing your search above and press return to search.

விபூதி வைத்து வந்த மாணவியை அவமானப்படுத்திய ஆசிரியை - மதமாற்றும் முயற்சி என பெற்றோர் புகார்!

விபூதி வைத்து வந்த மாணவியை அவமானப்படுத்திய ஆசிரியை - மதமாற்றும் முயற்சி என பெற்றோர் புகார்!

ThangaveluBy : Thangavelu

  |  26 April 2022 2:33 PM GMT

திருப்பூர் மாநகரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் மதம் மாற்றும் முயற்சியில் ஆசிரியை ஒருவர் ஈடுபடுவதாக மாணவி ஒருவர் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். இது குறித்து அந்த மாணவி பேசுகின்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அப்பள்ளியை இந்து முன்னணி நிர்வாகிகள் சென்று விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே திருப்பூர் மாநகரில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர்தான் இது போன்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதில் தினமும் தான் பள்ளி செல்லும்போது, நெற்றியில் திருநீறும், கழுத்தில் ருத்ராட்சம் அணிந்து செல்வேன். அது போன்று சென்ற சமயத்தில் தமிழ் ஆசிரியை திலகழவதி என்பவர் மாணவியை திட்டியுள்ளார். அதாவது நீ நெற்றியில் பட்டை மட்டும் போட்டு வரத்தெரிகிறது. ஆனால் ஒழுங்காக படிக்க மாட்டாயா என்று திட்டியுள்ளார். அது மட்டுமின்றி வகுப்பு தொடங்குவதற்கு முன்பாக இயேசுவை பிரார்த்தனை செய்ய வற்புறுத்தியுள்ளார். இதனை மாணவி வீடியோவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆங்கில ஆசிரியையும் நெற்றியில் திருநீறும், ருத்ராட்சமும் அணிந்து வரக்கூடாது என்று திட்டியதாக மாணவி குறிப்பிட்டார். தற்போது இந்த மாணவியின் குற்றச்சாட்டு திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் பெற்றோர் மற்றும் இந்து முன்னணி அமைப்பு கூறியுள்ளது.

Source, Image Courtesy: One India Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News