Kathir News
Begin typing your search above and press return to search.

எங்கே செல்கிறது தமிழக மாணவ சமுதாயம்? மீண்டும் பள்ளி வகுப்பறைக்குள் இப்படி ஒரு நிகழ்வா?

எங்கே செல்கிறது தமிழக மாணவ சமுதாயம்? மீண்டும் பள்ளி வகுப்பறைக்குள் இப்படி ஒரு நிகழ்வா?

DhivakarBy : Dhivakar

  |  27 April 2022 12:17 PM GMT

திருவாரூர் மாவட்டம் சூரனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறையிலேயே சட்டையை அவிழ்த்து விட்டு மாணவர்கள் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக, பள்ளி மாணவர்களின் ஒழுங்கீன நடவடிக்கைகள்தான் பேசுபொருள் ஆகியுள்ளது.


முக்கியமாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்றில், ஆசிரியரை பள்ளி மாணவன் ஒருவன் வகுப்பறையிலேயே அடிக்க கை ஓங்கியச் சம்பவம் தமிழகம் முழுவதும் பேசுபொருளானது.


இதன் வரிசையில், திருவாரூர் மாவட்டம் சூரனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், வகுப்பறையில் கிட்டதட்ட பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் சட்டைப் பட்டனை அவிழ்த்து விட்டும், ஒரு சில மாணவர்கள் சட்டையை முழுமையாகக் அழுதுவிட்டு, பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இதுகுறித்து சூரனூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு, திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News