Kathir News
Begin typing your search above and press return to search.

ஜெபக்கூடத்தில் இந்து மதத்தை இழிவுபடுத்தி பிரச்சாரம் - களத்தில் இறங்கிய இந்து முன்னணி

ஜெபக்கூடத்தில் இந்து மதத்தை இழிவுபடுத்தி பிரச்சாரம் - களத்தில் இறங்கிய இந்து முன்னணி

DhivakarBy : Dhivakar

  |  28 April 2022 6:41 AM GMT

தஞ்சை : ஜெபக்கூடம் நடத்தி, இந்து மதத்தை இழிவுபடுத்தும் பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு, சட்டவிரோத மதமாற்றம் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தமிழகத்தில் கடந்த 10 மாதங்களாக, பொது இடங்களில் சட்டவிரோத ஜெபம் கூடங்களும், இந்து மதத்தை இழிவுபடுத்தும் பிரச்சாரங்களும், சட்டவிரோத கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டுக்களும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. "இதனை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று இந்து மத உணர்வாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


இந்த வரிசையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நரியன்பாளையம் பகுதியில், 'ஆத்ம நேசர் ஜெபக்கூடம்' என்ற பெயரில், ஜெபக்கூடம் நடத்தி இந்து மதத்தை இழிவுபடுத்தும் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு, அப்பகுதி மக்களை சட்டவிரோத கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுத்துவதாக, இந்துமுன்னணி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.


இந்த சம்பவத்தை கண்டித்து, இந்து முன்னணி அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளது.

Hindu Munnani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News