Kathir News
Begin typing your search above and press return to search.

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி கர்ப்பமாக்கிய மதபோதகர் - இளம்பெண்ணின் நிலை என்ன?

திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி கர்ப்பமாக்கிய மதபோதகர் - இளம்பெண்ணின் நிலை என்ன?

ThangaveluBy : Thangavelu

  |  29 April 2022 1:58 PM GMT

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இரண்டு முறை கர்ப்பமாக்கிய மதபோதகர் மீது இளம்பெண் ஒருவர் பரபரப்பான புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதியை சேர்ந்தவள். சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் காஞ்சிக்கோயில் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தேவாலயத்துக்கு சென்று வருவது வழக்கம். அந்த சமயத்தில் அங்கு 26 வயதுடைய ஆண் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கின்றார். எனவே அவரை கவனிக்க முடியுமா என்று கேட்டார். சரி என்று கடந்த 2017ம் ஆண்டு அவரது வீட்டுக்கு சென்று உதவியாக இருந்தேன். அப்போது தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சமாதானம் செய்தார்.

அதன் பின்னர் சில நாட்கள் கழித்து தன்னை சேலம் அழைத்து சென்று கருவை கலைக்க வைத்தார். மீண்டும் சில மாதங்கள் கழித்து தன்னிடம் உல்லாசமாக இருந்த நிலையில், மீண்டும் கருவுற்றேன். அப்போது சேலத்திற்கு அழைத்து சென்று கருவை கலைக்க வைத்தார். அதற்கு அவரது தந்தையும் உடந்தை. ஆனால் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தார். அதன் பின்னர் மகாராஷ்டிரா மாநிலம் சென்றுவிட்டார். தற்போது மதபோதகராக திரும்பி வந்துள்ளார். எனவே தன்னை நம்பி ஏமாற்றிய அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை செய்தவதாக உறுதி அளித்துள்ளனர்.

Source: Daily Thanthi

Image Courtesy: Mediyaan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News