Kathir News
Begin typing your search above and press return to search.

'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' பயங்கரவாத இயக்கம் - ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா பயங்கரவாத இயக்கம் - ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடி

ThangaveluBy : Thangavelu

  |  6 May 2022 12:46 PM GMT

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்பது மிகவும் ஆபத்து நிறைந்த இயக்கம் எனவும், அவை பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக செயல்பட்டு வருவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடியாக பேசியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் பேசியதாவது: அரசியல் லாபத்திற்காக வெறும் வன்முறையை தூண்டுபவர்கள் அனைவருமே பயங்கரவாதிகளே. எனவே இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) மிகவும் ஆபத்து நிறைந்த இயக்கமாகும். மனித உரிமையை காப்பது, அரசியல் மாணவர் இயக்கம் போன்ற முகமூடியை அணிந்து கொண்டு இந்தியாவில் இந்த இயக்கம் இயங்கி வருகிறது. எனவே இவை பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்னாடி இருந்து செயல்படுகிறது. இவ்வாறு ஆளுநர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News