Kathir News
Begin typing your search above and press return to search.

அமைச்சர்கள் ஆய்வு செய்தி வெளியிடுவதற்கு பணம் பங்கிடுவதில் செய்தியாளர்களிடையே அடிதடி!

அமைச்சர்கள் ஆய்வு செய்தி வெளியிடுவதற்கு பணம் பங்கிடுவதில் செய்தியாளர்களிடையே அடிதடி!

ThangaveluBy : Thangavelu

  |  20 May 2022 10:51 AM GMT

தேனியில் அமைச்சர்கள் ஆய்வு நடத்தப்பட்ட செய்தி வெளியிடுவதற்காக வழங்கப்பட்ட பணத்தை பி.ஆர்.ஓ., அறையில் பங்கீட்டுக்கொள்வதில் செய்தியாளர்களிடையே அடிதடி நடந்துள்ளது.

தேனியில் கடந்த 18ம் தேதி அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த செய்தியை சில செய்தித்தாள்களில் வெளியிடுவதற்காக இரவு 7 மணிக்கு பி.ஆர்.ஓ., அறையில் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் ராமமூர்த்தி, பி.ஆர்.ஓ., சண்முகசுந்தரம் முன்னிலையில் சில செய்தியாளர்களை அழைத்து ரூ.500 வீதம் கொடுக்கப்பட்டுள்ளது.

அப்போது சில போலி செய்தியாளர்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் பத்திரிகை நடத்துபவர்கள் ஒன்றாக கூடியதாக கூறப்படுகிறது. பத்திரிகையாளர் என சொல்லிக்கொள்ளும் ராஜேந்திரபிசாத்திற்கும், சின்னதம்பிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியில் முடிந்துள்ளது. அப்போது ஒருவருக்கு ஒருவர் நாற்காலிகளை தூக்கி வீசியுள்ளனர். இதனை பார்த்து பி.ஆர்.ஓ., சண்முகசுந்தரம் தப்பியோடியுள்ளார். மற்ற ஊழியர்கள் சண்டையை தடுத்துள்ளனர். இதன் பின்னர் இவரும் மாற்றி, மாற்றி புகார் கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News