Kathir News
Begin typing your search above and press return to search.

மழலையர் பள்ளியில் மத பிரசாரம்: இந்து முன்னணி பரபரப்பு புகார்!

மழலையர் பள்ளியில் மத பிரசாரம்: இந்து முன்னணி பரபரப்பு புகார்!

ThangaveluBy : Thangavelu

  |  24 May 2022 5:39 AM GMT

மதுரை மழலையர் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்துவதாக மற்ற பள்ளிகளின் மாணவ, மாணவிகளையும் வரவழைத்து கிறிஸ்துவ மத பிரசாரம் செய்வதாக ஆட்சியர் அனீஷ்குமார் மற்றும் போலீஸ் கமிஷ்னர் செந்தில் குமார் உள்ளிட்டோரிடம் இந்து முன்னணியினர் புகார் அளித்துள்ளனர்.

மதுரை, தெப்பக்குளம் பழைய மீனாட்சி நகரில் ஜாய்ஸ் மழலையர் துவக்கப்பள்ளி உள்ளது. அங்கு கடந்த மே 19ம் தேதி கோடை முகாமில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்களை வரவழைத்து, அன்பு மற்றும் பாசத்தை செலுத்துவது எப்படி என்று போதித்துள்ளனர். இதன் பின்னர் வகுப்பு முடித்து வீடு திரும்பிய மாணவர்களிடம் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் விசாரித்துள்ளனர். அப்போது மதத்தை பற்றி பேசியதாகவும், நாங்கள் கேட்டுக் கொண்டதற்காக பரிசு தந்ததாகவும் மாணவர்கள் கூறினர்.

இதனை வீடியோவாக பதிவு செய்து கொண்ட பின்னர் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் கமிஷ்னரிடம் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் அரசுபாண்டி மற்றும் நிர்வாகிகள் புகாராக அளித்துள்ளனர். தற்போது மழலையர்களையும் விட்டு வைக்காமல் மதபிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை அளிக்கிறது. அன்பு, பாசம் சொல்லிக்கொடுப்பதாக கூறி மதமாற்றும் வேளையில் இது போன்ற தனியார் பள்ளிகள் ஈடுபடுவது பெற்றோர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: Dinamalar

Image Courtesy: Parents

Next Story
கதிர் தொகுப்பு
Trending News