Kathir News
Begin typing your search above and press return to search.

மோசடி பெண் பொய்யான பாலியல் புகார்: பாதிரியார் போலீசாரிடம் கதறல்!

மோசடி பெண் பொய்யான பாலியல் புகார்: பாதிரியார் போலீசாரிடம் கதறல்!

ThangaveluBy : Thangavelu

  |  4 Jun 2022 2:52 AM GMT

மோசடி பெண் தன்னை பொய்யான பாலியல் புகாரில் சிக்க வைப்பதாகவும், கொலை மிரட்டல் விடுத்து வரும் நிலையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் அளித்த புகாரில் கூறியுள்ளார்.

சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் காட்ப்ரே வாஷிங்டன் நோபில், இவர் ஒரு பாதிரியார் ஆவார். இவர் நேற்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், சென்னை அண்ணாநகர் கிழக்கு, குமரன் நகர் பகுதியில் வசிப்பவர் மரிய செல்வம். இவர் தன்னை ஒரு மதபோதகராக போன்று காட்டி வருகின்றார். எனது மகன் உள்ளிட்ட சிலருக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் பணம் மோசடி செய்துள்ளார்.

இது பற்றி ஏற்கனவே காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளேன். மரிய செல்வம் மீது பெரியமேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த மரிய செல்வம், நான் பாலியல் தொல்லை அளித்ததாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது பொய்யான குற்றச்சாட்டு என்பதை நிரூபிப்பேன் என்றார்.

இந்நிலையில், மரிய செல்வம் மீது மிரட்டல் விடுத்து சி.டி. ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் என்னை சீண்டி பாக்குறீங்க, நான் குரல் கொடுத்தால் வெளிமாவட்டங்களில் இருந்து ஆட்கள் வருவார்கள். சும்மா பாம்ப நீங்க சீண்டினால் பாம்பு கொத்தும். விஷம் ஏறும். அவ்வளவுதான் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே இவரால் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பாதிப்பு உள்ளது. உடனடியாக போலீசார் தகுந்த பாதுகாப்பை அளித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: Dinamalar

Image Courtesy:Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News