Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து தர்மத்தை காக்க இந்துக்கள் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும் - மதுரையில் குவிந்த துறவியர்கள் மாநாட்டில் உறுதிமொழி

இந்து தர்மத்தை காக்க இந்துக்கள் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும் - மதுரையில் குவிந்த துறவியர்கள் மாநாட்டில் உறுதிமொழி

ThangaveluBy : Thangavelu

  |  7 Jun 2022 4:35 AM GMT

இந்து தர்மத்தை காக்க இந்துக்கள் அனைவரும் சபதம் ஏற்க வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற விஷ்வ இந்து பரிஷத் அறவழிகாட்டும் ஆன்றோர் பேரவையின் துறவியர் மாநாட்டில் அகில உலக பொதுச்செயலாளர் மிலிந்த் பிராண்டே தெரிவிக்க துறவிகள் மற்றும் மக்கள் அனைவரும் 'ஜெய் ஸ்ரீராம் என்று வீர முழக்கமிட்டனர்.

அப்போது அவர் பேசுகையில், வேற்றுமத அமைப்பு இந்து மதத்திற்கு கேடு விளைவிக்கிறது. சமீபத்தில் கேரளாவில் ஒரு மத அமைப்பின் கூட்டத்தில் பேசும்போது, இந்துக்கள் சாக தயாரா இருங்கள் என கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதற்காக சுமார் 1.2 கோடி இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி கொடுப்போம் என்று அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் வெளிப்படையாக பேசினர். ஆனால் அதே நேரத்தில் இந்து மதத்தை குழி தோண்டி புதைப்பதை பார்த்து சுவாமிகள் முருகன், பெருமாள், ஈசன் அஞ்ச மாட்டார்கள். அவர்கள் கையிலும் ஆயுதங்கள் இருப்பதனை மறந்து விடாதீர்கள் என்றார்.

மேலும், மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் பேசுகையில், ஆதீனம் அரசியல் பேசக் கூடாது என்றால் அரசியல்வாதிகளுக்கு கோயிலில் என்ன வேலை இருக்கிறது. சுவாமி துஷ்ட தேவதை என்பவர்களுக்கு உண்டியல் மட்டும் இஷ்ய தேவதையா. எனவே அறநிலையத்துறையை நீக்கம் செய்து விட்டு கோயில்களை நீதிபதி தலைமையில் எங்களிடம் ஒப்படையுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News