Kathir News
Begin typing your search above and press return to search.

பொதுமக்களை கத்தி முனையில் மிரட்டும் கஞ்சா இளைஞர் - கஞ்சா தலைவிரித்தாடும் தலைநகரம்

பொதுமக்களை கத்தி முனையில் மிரட்டும் கஞ்சா இளைஞர் - கஞ்சா தலைவிரித்தாடும் தலைநகரம்

ThangaveluBy : Thangavelu

  |  14 Jun 2022 10:17 AM GMT

சென்னையில் கஞ்சா போதையில் ரவுடியின் சகோதரர் ஒருவர் நடந்து செல்லும் பொதுமக்களை கத்தி முனையில் மிரட்டும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமங்கலம், பாடிகுப்பம் பகுதியில் கடந்த 11ம் தேதி கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தார். அதாவது நடந்து செல்லும் பொதுமக்களை பார்த்து கத்தியை காண்பித்து மிரட்டும் செயலில் ஈடுப்பட்டு வந்தார்.

இது தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் ஜே.ஜே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் நந்தினி என்ற ரவுடியின் சகோதரர் யுவராஜ் என்பவர் இந்த அடாவடி செயலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த யுவராஜை ரோந்து போலீசார் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றபோது அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News