Kathir News
Begin typing your search above and press return to search.

தஞ்சை: மின்தடையால் யு.பி.எஸ். வெளிச்சத்தில் பிரசவம் பார்த்த கொடுமை!

தஞ்சை: மின்தடையால் யு.பி.எஸ். வெளிச்சத்தில் பிரசவம் பார்த்த கொடுமை!

ThangaveluBy : Thangavelu

  |  26 Jun 2022 8:13 AM GMT

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள தலைமை மருத்துவமனையில் மின்சாரம் தடைப்பட்டதால் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு யு.பி.எஸ். வெளிச்சத்தில் பிரசவம் பார்த்த கொடுமை அரங்கேறியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள தலைமை மருத்துவமனையில் நேற்று (ஜூன் 25) இரவு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. நீண்ட நேரமாக மின்சாரம் வராமல் இருந்தது. அப்போது பிரசவ வலியால் இருந்த பெண்ணுக்கு மருத்துவம் பார்க்க முடியாமல் மருத்துவர்கள் மிகப்பெரிய அவதியுற்றனர்.

இதன் பின்னர் பிரசவ அறைக்கு கொண்டுசெல்லப்பட்ட பெண்ணிற்கு யு.பி.எஸ். வெளிச்சத்தில் அகழான பெண் குழந்தை பிறந்துள்ளது. இது பற்றி நோயாளிகளின் உறவினர்கள் கூறும்போது, மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதி மற்றும் இரவு நேர மருத்துவர் இல்லை. எனவே இதனை அரசு உடனடியாக செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். மேலும், அதே மருத்துவமனைக்கு காலில் வெட்டப்பட்ட நோயாளி ஒருவர் மருத்துவமனைக்கு வந்தபோது சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் கும்பகோணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News