Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் செய்வோம் என்றனர் செய்யவில்லை - விரக்தியில் மருத்துவர்கள்!

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் செய்வோம் என்றனர் செய்யவில்லை - விரக்தியில் மருத்துவர்கள்!

ThangaveluBy : Thangavelu

  |  30 Jun 2022 9:47 AM GMT

அரசு மருத்துவர்கள் ஊதிய, உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஜூன் 29) முதல் சேலத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலர் ரவீந்திரநாத் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு மருத்துவர்கள் ஊதிய, உயர்வு பதவி உயர்வு உள்ளிட்ட நியாயமான பல்வேறு கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஆட்சியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது இடமாறுதல் செய்யப்பட்டனர்.

அப்போது தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறியிருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டுகள் கடந்தும் இதுவரையில் நிறைவேற்றவில்லை. இதனால் மருத்துவர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News