Kathir News
Begin typing your search above and press return to search.

நாட்டை துண்டாட முயற்சிக்கிறார்: ஜெகத்ஸ் கஸ்பர் மீது கமிஷ்னர் அலுவலத்தில் பரபரப்பு புகார்!

நாட்டை துண்டாட முயற்சிக்கிறார்: ஜெகத்ஸ் கஸ்பர் மீது கமிஷ்னர் அலுவலத்தில் பரபரப்பு புகார்!

ThangaveluBy : Thangavelu

  |  2 July 2022 6:45 AM GMT

தொடர்ந்து தேச விரோத செயலில் ஈடுபட்டு வரும் ஜெகத் கஸ்பர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க. சிறுபான்மையினர் அணியின் மாநில தலைவர் டெய்ஸி தங்கையா சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் நேற்று (ஜூலை 1) அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: சென்னையில் கடந்த ஜூன் 19ம் தேதி நடைபெற்ற சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டு இயக்கம் நடத்திய கூட்டம் ஒன்றில், விடுதலை புலிகள், கிறிஸ்தவ மிஷனரிகளின் ஆதரவாளரான ஜெகத் கஸ்பர் ராஜ் கலந்து கொண்டு தேசத்திற்கு விரோதமான பேச்சுக்களை பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது இஸ்லாமியர்கள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ஒன்றுபட்டு தனி நாடு கேளுங்கள் என்ற தேசத்திற்கு விரோதமான பேச்சை பேசியுள்ளார். மேலும், நமது நாட்டு மக்களை பிளவுப்படுத்தும் நோக்கத்தோடும், மக்களிடம் வன்முறையை தூண்டுகின்ற விதமாக அவர் பேசி வருகிறார். இதன் மூலம் மக்களுக்கு தீய எண்ணங்களை விதைத்து வருகிறார். நாட்டை துண்டாடவும், தேச விரோத சக்திகளுடன் இணையந்து செயல்பட்டு வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News