Kathir News
Begin typing your search above and press return to search.

வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற பஞ்சலோக சுவாமி சிலைகள் மீட்பு - எங்கே தெரியுமா?

வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற பஞ்சலோக சுவாமி சிலைகள் மீட்பு - எங்கே தெரியுமா?

ThangaveluBy : Thangavelu

  |  2 July 2022 11:34 AM GMT

கும்பகோணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சி செய்த லட்சுமி மற்றும் சரஸ்வதி பஞ்சலோக சிலைகளை போலீசார் அதிரடியாக மீட்டுள்ளனர். இதற்கு உடந்தையாக இருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மர்ம நபர்கள் இரண்டு பேர் மிகவும் பழமையான பஞ்சலோக சுவாமி சிலைகளை விற்கவும் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்கு முயற்சி செய்து வருவதாக சிலை கடத்தல் பிரிவு அதிகாரிக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து ஐ.ஜி. தினகரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தஞ்சாவூரைச் சேர்ந்த ரஞ்சித் 22, கும்பகோணத்தைச் சேர்ந்த உதயகுமார் 40 ஆகிய இரண்டு பேரும் வெளிநாடுகளுக்கு சுவாமி சிலைகளை கடத்தி விற்பனை செய்வதற்கு முயற்சி செய்து வருவதை கண்டறிந்தனர். அதன்படி சிலை வியாபாரிகள் போன்று போலீசார் நடந்து கொண்டு இரண்டு குற்றவாளிகளையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு சிலைகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News