Kathir News
Begin typing your search above and press return to search.

தொழில் அதிபரை குடும்பத்துடன் கடத்தி சொத்துக்கள் அபகரிப்பு: முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு சம்மன்!

தொழில் அதிபரை குடும்பத்துடன் கடத்தி சொத்துக்கள் அபகரிப்பு: முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு சம்மன்!

ThangaveluBy : Thangavelu

  |  2 July 2022 11:36 AM GMT

சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடத்தி சொத்துக்களை அபகரித்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு திருமங்கலம் முன்னாள் காவல் உதவி ஆணையருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியுள்ள சம்பவம் காவல்துறை தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருக்கும் முன்னாள் உதவி ஆணையர் சிவக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ள நிலையில், தற்போது மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News