Begin typing your search above and press return to search.
ஈரோட்டில் இளைஞர்களுக்கு கஞ்சா சாக்லேட்கள் விற்று வந்த இரண்டு பேர் கைது!

By :
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் இளைஞர்களுக்கு கஞ்சா சாக்லேட்களை விற்று வந்ததாக இரண்டு வடமாநிலத்தை சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சமீப காலமாக போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இளைஞர்களுக்கு கஞ்சா சாக்லேட்களை விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்று போலீசார் சோதனை நடத்தியபோது குடியிருப்பு பகுதிகளில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த இரண்டு பேர் கஞ்சா கலந்த சாக்லெட்களை விற்று வந்துள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Source, Image Courtesy: Polimer
Next Story