Kathir News
Begin typing your search above and press return to search.

ஆவடி நிலத்தை கோபியில் பத்திரப்பதிவு: சார் பதிவாளர் சஸ்பெண்ட்!

ஆவடி நிலத்தை கோபியில் பத்திரப்பதிவு: சார் பதிவாளர் சஸ்பெண்ட்!

ThangaveluBy : Thangavelu

  |  22 July 2022 7:00 AM GMT

சென்னை ஆவடியில் பத்திரப்பதிவு செய்வதற்கு தடை விதிக்கப்பட்ட நிலத்தை, கோபிச்செட்டிபாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அன்னூர் சார்பதிவாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம், அன்னூர் சார்பதிவாளராக இருந்தவர் குப்புராஜ். இவரை சஸ்பெண்ட் செய்து தமிழக பதிவுத்துறை ஐ.ஜி., சிவன் அருள் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கையால் கோவை பதிவுத்துறை அலுவலக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த குப்புராஜ் ஏற்கனவே ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் ஜாயிண்ட் 2 அலுவலகத்தில் சார்பதிவாளராக இருந்தபோது நடைபெற்ற தவறுக்காக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சென்னை ஆவடியில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஒரு சர்வே எண்ணில் உள்ள நிலத்தை பதிவு செய்வதற்கு சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.யிடம் தடையின்மை சான்று பெற வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் அது போன்ற எவ்வித சான்றும் இல்லாமல் அன்னூரில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News