Kathir News
Begin typing your search above and press return to search.

காவலர் குடியிருப்பில் எஸ்.ஐ., மனைவி கொன்று புதைப்பு: கடலூர் எஸ்.பி., அலுவலகம் அருகே பயங்கரம்!

காவலர் குடியிருப்பில் எஸ்.ஐ., மனைவி கொன்று புதைப்பு: கடலூர் எஸ்.பி., அலுவலகம் அருகே பயங்கரம்!

ThangaveluBy : Thangavelu

  |  24 July 2022 12:39 PM GMT

கடலூர் எஸ்.பி., அலுவலகம் அருகே ஓய்வு பெற்ற எஸ்.ஐ., மனைவியை கொடூரமாகக் கொலை செய்து நகைகளைப் பறித்துச் சென்ற போதை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே கீழ்காங்கேயத்தை சேர்ந்தவர் சதாசிவம். இவர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி மலர்க்கொடி இவர்களுக்கு 4 மகன்கள் இருக்கின்றனர். கடைசி மகன் சிவகுரு காவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடலூர் புதுக்குப்பம் காவலர் குடியிருப்பில் தங்கி கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் மலர்க்கொடி அவதியுற்று வந்துள்ளார். இதனால் கடலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தனது போலீஸ் மகன் சிவகுரு வீட்டுக்கு சென்றுள்ளார். சம்பவம் நடைபெற்றபோது மதியம் இரண்டு மணியளவில் ஆனைக்குப்பத்தில் உள்ள தனக்கு தெரிந்த ஒருவரை பார்ப்பதற்காக சென்ற மலர்கொடி, அங்குள்ள பழைய காவலர் குடியிருப்பில் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார்.

முகம் சிதைக்கப்பட்ட நிலையில் காதில் அறுப்பட்டு நகைகள் கொள்ளை போயிருந்தது. இது பற்றி தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மலர்கொடி உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த படுகொலை எப்படி நடந்தது என்று போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு இளைஞர் தனது ஆடையில் ரத்தக்கரையுடன் சென்றார். அவரை பிடித்து விசாரித்ததில் நகைக்காக கொலை செய்தததை ஒப்புக்கொண்டார். அவரது பெயர் சத்யம் என்பதும் பெயிண்டராக வேலை பார்ப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source, Image Courtesy: Polimer

Next Story
கதிர் தொகுப்பு
Trending News