Kathir News
Begin typing your search above and press return to search.

விருதுநகர்: அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

விருதுநகர்: அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

DhivakarBy : Dhivakar

  |  25 July 2022 1:11 PM GMT

விருதுநகர்: பள்ளி மாணவர்களிடம் ஆபாசமாக பேசிய அரசுப் பள்ளி ஆசிரியரை, போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.


தமிழகத்தில் கடந்த ஓராண்டாக, அரசின் அனைத்துத் துறைகளும் சீராக இயங்கவில்லை என்று, அனைத்து தரப்பு மக்களும் குறைக்கூறி வருகின்றனர்.


இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே புதுச்சூரங்குடியில் இயங்கி வரும் அரசு உயர் நிலைப்பள்ளியில், பணியாற்றிவரும் ஆசிரியர் 'தாமோதரன்', மானவர்களிடம் வரம்பு மீறி ஆபாசமாக பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது.


அது மட்டுமில்லாமல் தாமோதரன், மானவர்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாகவும் புகார் எழுந்து, அப் பள்ளியின் பெற்றோர்களை அதர்ச்சியடையச் செய்தது.


இதையடுத்து பெற்றோர், உறவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் என அனைவரும் பள்ளிக்கு சென்று, தாமோதரனை கைது செய்யக்கோரி முற்றுகையில் ஈடுபட்டனர்.


உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த கோட்டாட்சியர் அனிதா, மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் தாமோதரன் காவல்துறையினரால் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.


"அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடம் முன்னுதாரணமாக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்" என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News