எப்போ சார் சொன்னது நடக்கும்? தி.மு.க வாக்குறுதியை நிறைவேற்ற கிறிஸ்தவ மாநாட்டில் கோரிக்கை!
By : Kathir Webdesk
செபி பேராயத்தின் சார்பில் கன்னியாகுமரி திருநெல்வேலி துாத்துக்குடி தென்காசி ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மண்டல பேராயர்கள் மற்றும் போதகர்களின் மாநாடு கன்னியாகுமரியில் நடந்தது.
இதில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான் மனோ தங்கராஜ் நாகர்கோவில் மேயர் மகேஷ் கலந்து கொண்டனர். சர்ச் கட்டவும் மக்கள் கூடுகைக்கு அனுமதி மறுக்கவும் பயன்படுத்தப்படும் பஞ்சாயத்து விதிகளை ரத்து செய்ய வேண்டும்.
கல்லறை தோட்டம் அமைக்க தாலுகாவுக்கு மூன்று ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். போதகர்கள் திருச்சபைகள் மீது தாக்குதல் நடத்தும் அமைப்புகளை அடக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25ல் வழங்கியுள்ள மத சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும். தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட அவரவருக்கு சொந்தமான இடங்களில் வழிபாட்டுத் தலங்கள் அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Input From: Dinamalar