Kathir News
Begin typing your search above and press return to search.

தேவாலயத்தில் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியார்!

தேவாலயத்தில்  சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியார்!

DhivakarBy : Dhivakar

  |  10 Aug 2022 11:14 AM GMT

ராமநாதபுரம்: கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனை செய்ய வந்த சிறுமிகளிடம், தேவாலயத்தின் பங்குத்தந்தை பாலியல் செயலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கிறிஸ்தவ பாதிரியார்கள் பல சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளி வருகின்றன.


இதன் வரிசையில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் உள்ள புனித அருளானந்தர் தேவாலயத்தில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 'ஜான் ராபர்ட்' என்பவர் பங்குத்தந்தையாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை(7-08-2022) பிரார்த்தனைக்காக தேவாலயத்திற்கு சிறுமிகள் சிலர் வந்துள்ளனர். அப்போது சிறுமிகளிடம் ஜான் ராபர்ட் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


இதனையடுத்து சிறுமிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் என்பவர், சிறுமிகளிடம் இச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.


பின்னர் ராமேஸ்வரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், பங்குத்தந்தை 'ஜான் ராபர்ட்' மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜான் ராபர்ட் 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Thamarai Tv

Next Story
கதிர் தொகுப்பு
Trending News