Kathir News
Begin typing your search above and press return to search.

பள்ளி மாணவியிடம் அத்துமீறிய வி.சி.க நிர்வாகி!

பள்ளி மாணவியிடம் அத்துமீறிய வி.சி.க நிர்வாகி!

DhivakarBy : Dhivakar

  |  15 Aug 2022 1:40 AM GMT

செங்கல்பட்டு: மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவரிடம், அப்பள்ளியின் ஆசிரியர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சமீபகாலமாக தமிழகத்தில் பள்ளி பயிலும் மாணவிகளிடம், பள்ளி ஆசிரியர்கள் அத்துமீறும் சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளிவருகின்றன.


அந்த வரிசையில், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே புதுப்பட்டினத்திலுள்ள 'செவன்த் டே' மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர், தன் பெற்றோரிடம் 'மணிமாறன்' என்ற தமிழ் ஆசிரியர் தன்னிடம் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அழுது புலம்பியுள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். ஆனால் பள்ளியின் தலைமை ஆசிரியர் பெற்றோர்களின் புகாரை கண்டுகொள்ளவில்லை.


இதனால் ஆத்திரம் அடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாமல்லபுரம் டி.எஸ்.பி, பெற்றோரிடம் புகாரை பெற்று, விசாரணைக்காக மணிமாறனை கைது செய்து மகளிர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.


ஆசிரியர் மணிமாறன் வி.சி.க (விடுதலை சிறுத்தைகள் கட்சி) நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News