ஸ்டாலினால் பிளானே இல்லாமல் துவங்கப்பட்ட படகுசவாரி - மீனவர்கள் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிய அவலம்!
By : Kathir Webdesk
கோவைக்கு கடந்த மாதம் வருகை புரிந்த ஸ்டாலின் வாலாங்குளம் மற்றும் உக்கடம் பெரியகுளத்தில் கடந்த மாதம் 24 ஆம் தேதி படகு சவாரியை தொடங்கி வைத்தார். பெடல் படகுகள், டீசல் படகுகள், துடுப்பு படகுகள், மோட்டார் படகுகள் ஆகியவை இங்கு சவாரிக்கு பயன்படுத்தப்படுகின்றன.
படகு சவாரி தொடங்கிய 10 நாட்களிலேயே குளங்களில் மீன்பிடி தொழிலை நம்பி வாழ்ந்து வந்த மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். கோவை குளங்களில் கிடைக்கும் ஜிலேபி, கட்லா, ரோகு உள்ளிட்ட சுமார் 7 வகையான மீன்களுக்கு, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் டீசல் படகுகள் விட ஆரம்பித்ததால், படகின் அதிர்வு, அதிலிருந்து வெளியேறும் எண்ணெய், பயங்கர சத்தம் உள்ளிட்ட காரணங்களால் மீன்கள் இறந்து மிதக்க தொடங்கி விட்டதாக கூறுகின்றனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தொடங்கப்பட்ட போதும் படகு சவாரிக்கான முன்னேற்பாடுகளை தொடங்கிய போதும் பெடல் மற்றும் துடுப்பு படகுகள் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்து இருந்ததாகவும் ஆனால் அதற்கு மாற்றாக தற்போது டீசல் படகுகளைப் பயன்படுத்தி வருகின்றதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். இவ்விவகாரத்தில் உடனடியாக அரசு தலையிட்டு டீசல் படைகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Input From: Puthiyathalaimurai