Kathir News
Begin typing your search above and press return to search.

ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளிலேயே தி.மு.க-வின் உண்மை முகம் தெரிய துவங்கி விட்டது - குஷ்பூ கூறிய உண்மைகள்

ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளிலேயே தி.மு.க-வின் உண்மை முகம் தெரிய துவங்கி விட்டது - குஷ்பூ கூறிய உண்மைகள்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Sep 2022 3:31 AM GMT

'தி.மு.க.,வின் உண்மை முகம் தெரிய துவங்கி விட்டது. ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளிலேயே நடக்கக்கூடாதவை எல்லாம் நடக்கிறது என, புதுடில்லியில் நடந்த அம்பேத்கரும், மோடியும் புத்தக வெளியீட்டு விழாவில் பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு தெரிவித்தார்.

பிரதமர் மோடி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நிறைய நல்ல விஷயங்களை செய்திருக்கிறார். அவர்களின் ஆசீர்வாதம் மோடிக்கு என்றும் துணை இருக்கும். 8ஆண்டுகளாக பிரதமர் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சென்று வருகிறார். பெண்கள் சொந்த காலில் நிற்க வழிவகை செய்துள்ளார்.

பா.ஜ,க மீது மக்கள் எந்தளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கின்றனர் என்பதை, 2024 லோக்சபா தேர்தலில் காணலாம். கருணாநிதி பெயரை வைத்து தான், தி.மு.க., தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தது.

ஆட்சிக்கு வந்த பிறகு மின் கட்டணம், பால் விலையை உயர்த்தி விட்டனர். மற்ற மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்தனர். மாநில வாட் வரியை குறைக்கும்படி மத்திய அரசு கூறியும், தமிழகத்தில் இதுவரை குறைக்கவில்லை.

தி.மு.க., கூறிய எதையும் செய்யவில்லை. ஒன்றரை ஆண்டுகளில் தி.மு.க.,வின் உண்மையான முகம் வெளியில் தெரிய துவங்கி விட்டது. அவர்கள் பேச்சு பெரிதாக இருக்கும். ஆனால், செயல் இருக்காது என குஷ்பு கூறியுள்ளார்.

Input From: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News