மண்டைக்காடு கோயில் அருகே கிறிஸ்தவ மாநாடு - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு என்ன?
By : Kathir Webdesk
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அருகே கிறிஸ்தவ மாநாடு நடத்த அனுமதி மறுத்த தமிழக அரசின் உத்தரவு சரியானது. மாற்று இடத்தில் கிறிஸ்தவர்கள் மாநாடு நடத்த அனுமதிக்க கலெக்டர் பரிசீலிக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அனுமதி வழங்க சொல்லி மத்தவிளை முழு நற்செய்தி பெந்தகோஸ்தே சர்ச் போதகர் டைட்டஸ் தாக்கல் செய்த மனுவை கோர்ட் நிராகரித்தது.
பின்னணி:
மண்டைக்காடு பகுதியில் 1982ஆம் ஆண்டு ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் இடையில் மத மோதல் ஏற்பட்டது. பலர் உயிரிழந்தனர். மக்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. எதிர்காலத்தில் மத மோதல்களைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்க நீதிபதி பி.வேணுகோபால் தலைமையிலான கமிஷனை அப்போதைய மாநில அரசு அமைத்தது.
அவர் மண்டைக்காடு பகுதியில் மதக் கலவரம் ஏற்படுவதற்கான சூழ்நிலைகளை விசாரித்து, அரசுக்கு பரிந்துரைத்தார். ஏற்கனவே பிற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் உள்ள இடங்களில் வேறு வழிபாட்டுத் தலங்களை அமைக்க எந்த ஒரு நபர் அல்லது எந்த நிறுவனத்திற்கோ அனுமதி வழங்கக்கூடாது.
ஒலிபெருக்கி, மைக் பயன்படுத்துவது ஒலி மாசுபாட்டை ஏற்படுத்துவதோடு பிற மதத்தின் மத நடைமுறைகளில் தலையிடுகிறது என கமிஷன் தெரிவித்துள்ளது. அதை1982ல் மாநில அரசு ஏற்றுக்கொண்டது.
Input From: Dinamalar