Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே வெடிகுண்டு கலாசாரம் வரும் - முன் வைக்கப்படும் பகிரங்க குற்றச்சாட்டு!

தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே வெடிகுண்டு கலாசாரம் வரும் - முன் வைக்கப்படும் பகிரங்க குற்றச்சாட்டு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 Oct 2022 12:06 PM GMT

தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே, தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவுவது வாடிக்கை என, பா.ஜ.க மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தும், தி.மு.க., அரசு தடை விதித்துள்ளது.

திமுக கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் மத நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்துவதாக கூறியுள்ளனர்.

தமிழகத்தில் மத நல்லிணக்கம் நன்றாக உள்ளது. அதனால் தான் முஸ்லிம்களும், கிறிஸ்துவர்களும், பாஜகவின் கொள்கைகளை ஏற்று உறுப்பினராக இணைந்து வருகின்றனர்.

தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் பரவி வருகிறது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே, வெடிகுண்டு கலாசாரம் பரவுவது வாடிக்கை தான்.

தி.மு.க.,வில் கட்சித் தலைமைக்கும், தொண்டர்களுக்கும் உள்ள தொடர்பு குறைந்து வருகிறது. ஓட்டு வங்கிக்காக ஆன்மிக அரசியல் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். ஹிந்து மதத்தைப் பற்றி அவதுாறாக பேசிய, அவரது கட்சியைச் சேர்ந்த ஆ.ராஜா மீது நடவடிக்கை எடுக்கட்டும் என விமர்சித்தார்.

Input From: Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News