மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை!
By : Kathir Webdesk
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முட்டுக்கட்டை போடுகிறது. மக்கள் நல திட்டங்கள் ஏழை மக்களுக்கு கிடைக்காமல் முட்டுக்கட்டை போடுகிறது.
பாஜகவினர் வீடு வீடாக மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என தேனியில் நடந்த கூட்டத்தில் மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் பக்கன்சிங் குலாஸ்தே தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறைவான அளவில் உள்ளது. இதனை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரையில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
பாஜகவினர் வீடு வீடாக சென்று மத்திய அரசின் திட்டங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஏழைகளை பயனார்களாக மாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் அதிகளவில் பா.ஜ., எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் இல்லை.
அதனால்தான் தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்கள் ஏழை மக்களுக்கு சென்றடையாமல் முட்டுக்கட்டை போடுகிறது. அடுத்தமுறை நான் தமிழகம் வரும் போது, மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களின் கொண்டு சேர்த்திருக்க வேண்டும் என்றார்.
Input From: Dinamalar