பயங்கராவதி ஜாகீர் நாயக் பக்கம் சாய்கிறாரா விஜயதரணி? பொதுமக்கள் மத்தியில் நடந்த சம்பவம்!
By : Kathir Webdesk
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,விஜயதாரணி, ஜாகிர் நாயக் ஒரு ஞானி. அவர் மீது மத்திய அரசு தவறாக நடவடிக்கை எடுக்க முயல்கிறது. அப்படிப்பட்ட அரசு நமக்கு தேவையில்லை என, பேசியுள்ளார்.
இதற்கு பா.ஜ.க சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம்பதிலடி கொடுத்தார். முஸ்லிம் மக்களை திசை திருப்பக் கூடிய அபத்தான கருத்தை விஜயதாரணி கூறியுள்ளார்.
முதலில், ஜாகிர் நாயக் என்பவர் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய கல்வியை கற்றதாக கூறும் ஜாகிர் நாயக், முஸ்லிம் மக்களிடம் மத பிரசாரம் மேற்கொண்டார்.
அவரது பேச்சில் முழுக்க முழுக்க இனவாதமும், மத நம்பிக்கையின் அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் கருத்துக்களும் தான் வெளிப்பட்டன.
தேசத்துக்கு எதிராக, இஸ்லாமியர்களை திசை திருப்ப கூடிய வேலையை தான் ஜாகிர் நாயக் செய்தார். அதுமட்டுமல்ல, சட்டவிரோத பண பரிமாற்றம் செய்தவர். வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக அரபு நாடுகளில் இருந்து தவறான வழியில் பணம் பெற்று, அதை வைத்து பல்வேறு மத மக்களுக்கு இடையே மோதலை உண்டாக்க துணிந்தவர்.
இதனை அறிந்த மத்திய அரசு, தன் புலனாய்வு அமைப்புகள் வாயிலாக, அவர் மீது நடவடிக்கை எடுத்து, கைது செய்ய முயற்சித்தது. அந்த சமயத்தில் தான், அவர் மலேஷியாவில் தஞ்சமடைந்தார்.
இப்படிப்பட்ட மோசமான பின்புலம் கொண்ட ஜாகிர் நாயக்கை, ஞானி என்று புகழ்வதும், மத்திய அரசு அவரை விரட்டி அடித்ததுபோல மேடையில் ஏறி நின்று பேசுவதும், ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு அழகல்ல.
விஜயதாரணி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, அவரை தண்டிக்க வேண்டும். இவர்களிடம் இஸ்லாமியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறினார்.
Input From: Dinamalar