Kathir News
Begin typing your search above and press return to search.

அண்ணாமலைக்கு குண்டு துளைக்காத கார்: என்ன நடக்கிறது தமிழகத்தில்? உளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

அண்ணாமலைக்கு குண்டு துளைக்காத கார்: என்ன நடக்கிறது தமிழகத்தில்? உளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Jan 2023 2:02 AM GMT

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், மத்திய அரசின் Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

மத்திய உளவுத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அண்ணாமலைக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பு குறித்தும் அவரது வீடு, தங்கும் இடங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் பற்றியும் ஆய்வு செய்துள்ளனர்.

மதவாதிகள், பிரிவினைவாதிகள் தரப்பில் இருந்து அண்ணாமலையின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை மத்திய உளவுத்துறையினர் கண்டறிந்துள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணாமலைக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அவருக்கு z பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படவேண்டும் என்றும் மத்திய உளவுத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

33 கமாண்டோக்கள் சுழற்சி முறையில் அண்ணாமலைக்கும் அவர் வீடு மற்றும் தங்குமிடத்திற்கும் பாதுகாப்பு அளிப்பர். அதோடு, குண்டு துளைக்காத வாகனம் அண்ணாமலைக்கு வழங்கப்படும்.

இதுவரை மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பில் இருந்துவரும் அண்ணாமலை, இனி Z பிரிவு பாதுகாப்பில் இருப்பார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பு பிரிவுகள் வருகிறது.

அண்ணாமலையின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அவருக்கு உடனடியாக Z பிரிவு பாதுகாப்பை கொடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாமலையிடம் மத்திய பாதுகாப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் நேரில் சென்று ஒப்புதலை வாங்கியுள்ளனர்.

Input From: Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News