Kathir News
Begin typing your search above and press return to search.

ஈரோட்டில் பெரியார் வீட்டுக்கே பட்டா இல்லை - அமைச்சரிடம் கேட்கும் இளங்கோவன்: சட்டசபையில் அதிர்ச்சி!

ஈரோட்டில் பெரியார் வீட்டுக்கே பட்டா இல்லை - அமைச்சரிடம் கேட்கும் இளங்கோவன்: சட்டசபையில் அதிர்ச்சி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 April 2023 1:28 AM GMT

பெரியார் இல்லத்திற்கே பட்டா இல்லாத நிலையில் விரைவில் பட்டா வழங்கவுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலுரை அளித்த வருவாய்த்துறை அமைச்சர் இது பற்றி பேசினார். ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வீட்டிற்கே பட்டா இல்லை என்றும், 7,000 குடும்பங்களுக்கு பட்டா இல்லை என்பதோடு, தந்தை பெரியார் வீட்டுக்கே பட்டா இல்லை.

இப்போது அனைவருக்கும் பட்டா கொடுக்கவுள்ளதாவும் அமைச்சர் தெரிவித்தார். பத்து ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டதாவும், இதை ஒழுங்குபடுத்தி துறையை சீர்திருத்தம் செய்யுள்ளதாகவும் அமைச்சர் ராமசந்திரன் கூறினார்.

அதிலும், சென்னையை சுற்றியுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டா பிரச்னைகளை பெரிதாக பேசுவதாகவும், அந்த 4 மாவட்டங்களில் பட்டா பிரச்னை தொடர்பாக பேரவை கூட்டத்தொடர் முடிந்த பின்பு, சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி பிரச்னைகள் சரி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

வீட்டு மனை பட்டாவை பொறுத்தவரை அரசு புறம்போக்கு, அரசு நத்தமாக இருந்தால் பட்டா கொடுக்க முடியாது. ஆனால் அரசு கிராம நத்தமாக இருந்தால் பட்டா கொடுக்கலாம். அதற்கான வழியை கண்டுபிடித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

நரிக்குறவர்கள், இருளர்கள் கண்டு கொள்ளப்படாமல் இருந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் 48,000 இருளர்கள் மற்றும் நரிக்குறவர்கள் குடும்பங்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு 33,607 பட்டா கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

Input From: News 7

Next Story
கதிர் தொகுப்பு
Trending News